Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாவு அரைக்கும் இயந்திரத்திற்கு- விண்ணப்பிக்கலாம்

 அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு, உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க 50 சதவீதம் மானியம் வழங்கப்ப டுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது: அரியலூர் மாவட்டத்தில், சமூகத்தில் பின்தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்டோருக்கு புதிய திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
'மகளிரின் வாழ்வாதாரத்தைம் மேம்படுத்தும் நோக்கில் ரூ.10 ஆயிரம் அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக் கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்கும்போது மொத்த விலை யில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5,000 மானிய தொகையாக வழங்கப்படும். இதற்கு, தமிழகத்தில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 25 வயதுக்கு மேல் இருத்தல் வேண்டும். திட்டத்தில் முன் னுரிமை பெறவேண்டுமானால் கைம்பெண்கள்,ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் என்பதற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு ரூ.1.20 லட்சம் மிகா மல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பங்களை, ஜூலை, 14-க்குள், அறை எண் 20, மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரகம், அரியலூர் என்ற முகவ ரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

Post a Comment

0 Comments