பள்ளிக் கல்வியில் பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப் பீட்டுப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அதில் ஈடுபடும் ஆசிரி யர்களுக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்.4 தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஏப்.19,10-ஆம் வகுப்புக்கு ஏப்.21 ஆகிய தேதிகளில் விடைத்தாள் மதிப் பீட்டு பணிகள் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற் போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையேகிறிஸ்தவபண்டிகையான புனிதவெள்ளிஏப்.18-ஆம் தேதி மற்றும் ஈஸ்டர் தினம் ஏப்.20-ஆம் தேதி கொண்டாடப்பட உள் ளன. இதற்கு இடைப்பட்ட ஏப்.19-ஆம் தேதி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு ஆசிரியர்களுக்கு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணி வருகிறது. இதனால் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று பண்டிகையை கொண்டாட முடியாத சூழல் நிலவுகிறது.
இந்நிலையை உணர்ந்து ஏப்.19-ஆம் தேதி விடைத்தாள் மதிப்பீட் டுப் பணிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதுநிலை ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று மேல்நிலை வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஏப்.19-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை தேர்வுத் துறை இயக்குநர் ந.லதா சுற்றறிக்கை வாயி லாக வெளியிட்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்