Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

கல்வி நிறுவனம் - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு

கல்வி நிறுவனம் - உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு
கல்வி நிறுவனங்களின் பெயர்களில்
இடம் பெற்றுள்ள ஜாதிப் பெயர்களை நான்கு வாரங்க ளுக்குள் நீக்க வேண்டும் என் றும், இல்லாவிட்டால் அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீ காரத்தை ரத்து செய்ய வேண் டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தென்னிந்திய செங்குந்த மகாஜனசங்கத்தைநிர்வகிக்க சிறப்பு அதிகாரியை நியமித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஜாதியை ஊக்கப்படுத்தும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்ய முடியுமா என்பது குறித்தும், பள்ளிகளின் பெயர்களில் உள்ள ஜாதிகளின் பெயர்களை நீக்க முடியுமா என்பது குறித்தும் விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தர விட்டிருந்தது.

இந்தநிலையில், சங்கத்தின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கி சங்க சட்ட திட்டத்தில் திருத்தங்கள் செய்து அரசை அணுக உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உயர்நீதி மன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

இது தொடர்பாக நீதிபதி பரத சக்கரவர்த்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: ஜாதி பெயரில் சங்கங்களை பதிவு செய்யக்கூடாது என்று பதிவாளர்களுக்கு பதிவுத் துறை ஐ.ஜி. சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். ஜாதி பெயர்க ளைத் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோதமான சங்கங்கள் என்று அறிவித்து பதிவை ரத்து செய்ய வேண் டும். கல்வி நிறுவனங்களில் இடம் பெற்றுள்ள ஜாதி பெயர் களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும்; இல்லையென் றால், அந்த கல்வி நிறுவனங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசின் கள்ளர் சீர்திருத்த பள்ளி, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளின் பெயர்களை அரசுப்பள்ளி என மாற்ற வேண் டும். பள்ளிப் பெயர்களில் நன்கொடையாளர்களின் பெயர் மட்டுமே இடம் பெற வேண்டும். அவர்களின் ஜாதி பெயர் இருக்கக் கூடாது என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித் துள்ளார்.

Post a Comment

0 Comments