பார்வை:
சென்னை-6, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் இதே எண்ணிட்ட செயல்முறைகள் நாள்.01.04.2025.
தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பார்வையில் கண்டுள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டப்படி மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதி தேர்வு நடைபெற்று வருகின்றது. 1 முதல் 3ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 11.04.2025 தேதியும், 4 மற்றும் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 17.04.2025 தேதியும், 6 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 24.04.2025 தேதியும் தேர்வுகள் நிறைவடைகின்றன.
மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதி தேர்வு கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டபடி வகுப்புவாரியாக தேர்வுகள் முடிந்த பின்னர் தொடர்புடைய வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கோடை விடுமுறை என அறிவிக்கப்படுகிறது.
விடைத்தாள் மதிப்பீட்டு பணி மற்றும் அடுத்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை பணி போன்ற நிர்வாகப் பணிகளை ஏப்ரல் 30ஆம் தேதி வரை LKG / UKG வகுப்புகளை கையாளும் ஆசிரியர்கள் உட்பட அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மேற்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மூன்றாம் பருவம் / ஆண்டு இறுதி தேர்வின் தேர்ச்சி அறிக்கைக்கு ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் அனைத்து பள்ளிகளும் ஒப்புதல் பெற்றிட வேண்டும். 01.05.2025 முதல் EMIS இணையதளத்தில் மாணவர்களுக்கான மாற்றுச் சான்றிதழ் கிடைப்பதற்கு மாநில மையம் வாயிலாக வழிவகை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்