திருச்சி சேதுராப்பட்டியில் உள்ள ஸ்ரீரங்கம், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024 2025 ஆம் கல்வியாண்டில் நான் முதல்வன் உயர்வுக்குபடி நிகழ்வு 2024 என்ற திட்டத்தின் மூலம் முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டில் சேர்வதற்கும் (Spot Admission], அண்மையில் வெளியிடப்பட்ட ITI - SCVT தேர்வு முடிவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களும் மற்றும் அடுத்து வெளியிடப்படவிருக்கும் ITI - NCVT தேர்வு முடிவில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேரடி இரண்டாமாண்டில் சேருவதற்கும் மாணவர் சேர்க்கை கால அவகாசம் 27.09.2024 வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாம் ஆண்டு ஆகியவற்றில் சேர விரும்பும் மாணவர்கள் கல்லூரிக்கு நேரில் வந்து ரூ.150/-ஐ செலுத்தி விண்ணப்பிக்கலாம். SC/ST மாணவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை. இப்பாலிடெக்னிக் கல்லூரியில் அமைப்பியல் (DCE-Cவில்). இயந்திரவியல் (DME-மெக்கானிக்கல்), மின்னியல் மற்றும் மின்னணுவியல் (DEEE-எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானீக்ஸ்), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் (DECE-எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிக்கேஷன்) மற்றும் கணிப்பொறியியல் (DCSE-கம்ப்யூட்டர்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஆண்டு ஒன்றுக்கு ரூ.2,142/- மட்டுமே கட்டணமாக செலுத்த வேண்டும். முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பீப்போம் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி இரண்டாமாண்டு மாணவம் சேர்க்கைக்கு ஐடிஐ (ITI) அல்லது 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் மாணவர்கள் சேர்க்கை தொடர்பாக 95974 76719. 82482 52577, 73739 05151, 90424 18693, 98423 16326. 88389 40440. 80720 02452 தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
சிறப்பம்சம்
பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் மூன்று ஆண்டுகள் படிப்பை முடித்தவுடன் வேலை வாய்ப்பு. அனைத்து வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், ஸ்மார்ட்கிளாஸ் ரூம், மாணவ மாணவியருக்கு விடுதி வசதி, இலவச பேருந்து பயண அட்டை, இரயில் கட்டண சலுகை, முதலாமாண்டு மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், 6 முதல் 10 அல்லது 12 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்ற மாணவ/மாணவிகளுக்கு மாதம் ரூ.1000/- கல்வி உதவித்தொகை, நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மாணவ மாணவியர்களுக்கு வேலை வாய்ப்பை உயர்த்திட திறன் மேம்பாட்டு பயிற்சி, அரசின் உதவித்தொகையுடன் தொழிற்சாலைகளில் உள்ளுறை பயிற்சி (Internship Training). தொழிற்முனைவோர் மேம்பாட்டிற்காக நுனு பிரிவின் மூலம் சிறப்பு பயிற்சி, மதிப்பெண் அடிப்படையில் மாணவியர்களுக்கு (Pragati) உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாற்றுத்திறனாளி மாணவ/மாணவியர்களுக்கு (Saksham) உதவித்தொகை வருடம் ரூ.50,000, பெற்றோரை இழந்த மாணவ/ மாணவியர்களுக்கு (Swanath) உதவித்தொகை வருடம் ரூ.50,000, மாணவ மாணவியர்களுக்கு Chess Club, Cultural Club, Python (App Designing) Club, Literacy Club போன்ற பல்திறன் மேம்படுத்தும் பயிற்சிகள், சென்ற ஆண்டு 2023-2024ல் மூன்றாம் ஆண்டு முடித்த அனைத்து மாணவர்களும், வளாக நேர்காணல் மூலம் 100 சதவிகிதம் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்