Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Pongal Parisu: பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் எப்போது?-அதிகரிக்கும் எதிர்பார்ப்பு-தமிழக அரசு!

Pongal Parisu: பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் எப்போது?-தமிழக அரசு!


2024 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் 1000 ரூபாய் ரொக்கம் வழங்குவது குறித்து தமிழக அரசு தரப்பில் ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

பொங்கல் பரிசு தொகை 1000 ரூபாய் எப்போது?

தமிழ்நாட்டில் (2024) சில தினங்களுக்கு முன்பு பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்பஅட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களுக்கு, ஒரு கிலோ பச்சரிசி, சக்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க தமிழக அரசு அரசாணை அறிவித்தது.

இந்த அரசானையில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான  விவரங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. ரொக்க பரிசு தொகை பற்றிய அறிவிப்பு ஏதும் இடம் பெறவில்லை. இது மக்களிடையே பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதனைத் தொடர்ந்து விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தபோது ஆயிரம் ரூபாய
 பொங்கல் பரிசு தொகை வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் முடிவு செய்வார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் பொங்கலுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பரிசுத்தொகுப்புடன் வழக்கம்போல் ரொக்கப் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பல்வேறு கட்சி தலைவர்களும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை வலியுறுத்தியுள்ளனர்.

Post a Comment

0 Comments