Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பள்ளி மாணவ மாணவியருக்கு கலைப்போட்டிகள் மார்ச் 04 ஆம் தேதி

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் ஜவகர் சிறுவர் மன்றம் கலைப்போட்டிகள் நீலகிரி அறிஞர் அண்ணா உள் விளையாட்டு அரங்கத்தில் சார்பில் மாவட்ட மார்ச் 04, 2023 சனிக்கிழமை நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய கலைப்பிரிவுகளில் நடைபெறுகிறது. மேலும் 5-8, 5-12, 13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும்.

மாரச் (14 அன்று காலை 10 மணிக்கு குரலிசைப் போட்டி, பரதநாட்டியப் போட்டி, கிராமிய நடனப் போட்டி நடைபெறும், குரலிசை போட்டியில் முறையாக கரநாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாட வேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டியில் அதிகப்ட்சம் 3 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள். 

இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை கீராமிய நடனப் போட்டியில் நமது பாரம்பரிய கரகம், கால, பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும்.

மதியம் 2 மணிக்கு ஓவியப் போட்டி நடைபெறும். ஓவியத்தாள், வண்ணங்கள் தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். தளைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும். 

பங்கு பெறும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றுகள் வழங்கப்படும். 9-12. 13-16 என்ற வயது வரம்பில் முதல் பரிசு பெறும் சிறார்கள் அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர், மேலும் விவரம் வேண்டுவோர் ஊட்டி சவகர் சிறுவர் மன்றத் திட்ட அலுவலரை 9943433742 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளன.



Post a Comment

0 Comments