Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TEACHER - அரசு உதவி பெறும் பள்ளியில் நிரந்தர ஆசிரியர் வேலை- 2 பள்ளிகளில் காலியாக உள்ள காலி பணியிடங்கள்-CLICK HERE

TRB - ஆசிரியர் நியமனம் - வெளியான புதிய அறிவிப்பு-CLICK HERE

Ration card: ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு-CLICK HERE

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்கள் Download செய்ய மீண்டும் வாய்ப்பு -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

TRB -Syllabus for Direct Recruitment of Secondary Grade Teachers and B.T. Assistants -CLICK HERE

TET COMPETITIVE EXAM SYLLABUS - ALL SUBJECTS -ஆசிரியர் தகுதி தேர்வு- நியமன தேர்வு பாடத்திட்டம்-CLICK HERE 

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

பள்ளிக் கல்வி தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வி ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 4989 இடைநிலை ஆசிரியர், 5154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 3876 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 14,019 காலிப் பணியிடங்களை நேரடி நியமனம் / பதவி உயர்வு மூலம் நிரப்பும் வரை பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு தொகுப்பு ஊதியத்தில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதற்கு அனுமதி மற்றும் அப்பணியிடங்களில் பணிபுரியும் தற்காலிக அசிரியர்களுக்கு மதிப்பூதியம் (Honorarium) வழங்குவதற்கு ரூ.109,9152,000/- நிதி ஒப்பளிப்பு வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில், 2018-19. ஆம் கல்வியாண்டில் 1474 முதுகலை ஆசிரியர்களை தொகுப்பூதிய அடிப்படையில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கியும் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2019 2020 ஆம் கல்வியாண்டில் 2449 முதுகலை ஆசிரியர் பணியிடமும், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2774 முதுகலை ஆசிரியர்முதுகலை ஆசிரியர் பணியிடமும், மேலே மூன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 2774 முதுகலை ஆசிரியர் பணியிடமும் முதுகலை ஆசிரியர் தகுதி பெற்ற நபர்களை கொண்டு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்துக் கொள்ள அனுமதித்து வெளியிடப்பட்டுள்ளது. ஆணைகள் மேலே நான்காவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக் கல்வி

2

ஆணையரின் கடிதங்களில், தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2021 - 2022 ஆம் கல்வியாண்டில் 4863 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாகவும், 3105.2022 தேதியில் ஓய்வு பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் எண்ணிக்கை 126 எனவும், இக்காலிப் பணியிடங்களையும் சேர்த்து நிரப்பத் தகுந்த காலிப் பணியிடங்கள் 4989 எனவும், இக்காலிப் பணியிடங்களில் பெரும்பாலானவை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் சேலம் போன்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் ஏற்பட்டவை எனவும், 2013 - 2014 ஆம் கல்வியாண்டிற்கு பிறகு நேரடி நியமனத்தின் வாயிலாக புதிதாக ஆசிரியர்கள் எவரும் நியமிக்கப்படாததால், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி நலன் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததால் ஒவ்வொரு வருடமும், ஒவ்வொரு பாடத்திலும், மாணவர்கள் பெற வேண்டிய கற்றல் அடைவுகள் மற்றும் கற்றல் விளைவுகளில் மிகவும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும், பெருந்தொற்று காலத்திற்கு பின்னர், அரசு பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை கணிசமான எண்ணிக்கையில் உயர்ந்துள்ளதாகவும், அதற்கேற்ப சுமார் 5000 இடைநிலை ஆசிரியர்கள் கூடுதலாக அரசு பள்ளிகளுக்கு தேவைப்படுகின்றனர். எனவே, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர்களை தெரிவு செய்யும் நடைமுறைகளை பின்பற்றி நேரடி நியமனம் மூலம் புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கு கால அவகாசம் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால், புதிய ஆசிரியர்களை நியமிக்கும் வரை மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படாமல் தற்காலிக ஆசிரியர்களை பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமித்திடலாம் எனவும், இவ்வகையில் நாளது தேதி வரை காலியாகவுள்ள 4989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்ய அனுமதி வேண்டி தொடக்கக் கல்விஇயக்குநர் கருத்துரு அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments