Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

Water Bell - வாட்டர் பெல் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு

Water Bell - வாட்டர் பெல் திட்டம்: வழிகாட்டுதல்கள் வெளியீடு
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை ஊக்குவிக்கும் 'வாட்டர் பெல்' திட்டத்தை உடனடியாக அமல்படுத்த தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் ற அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதுதொடர்பான வழிகாட்டு துறை தல்களும் வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளிகளில் மாணவ, மாணவிகள் தண்ணீர் அருந்துவதை ஊக் குவிக்கும் பொருட்டு, கேரளத்தைப் போல தமிழகத்திலும் 'வாட்டர் பெல்' திட்டம் அமல்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். இந்நிலையில், அதற் கான வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் சனிக்கி ழமை அனுப்பிய சுற்றறிக்கை:

பள்ளிகளில் மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை ஊக்கப்படுத்தும் விதமாக வாட்டர் பெல்' திட்டம் அறிமுகம் செய்து 5 நிமிடம் ஒதுக் கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்தார்.

அதன்படி உடல் நீரிழப்பு மாணவர்களின் அறிவாற்றல், கவனம் மற் றும் கல்வி செயல்திறனை கணிசமாக பாதிக்கும். எனவே, பள்ளிகளில் தண்ணீர் நுகர்வுக்கு மாணவர்களை ஊக்குவிப்பது பல்வேறு நன்மை களைத் தரும்.

இதையடுத்து மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வித மாக'வாட்டர் பெல்திட்டம் உடனே பள்ளிகளில் அமல்படுத்த அரசு, அரசு உதவி பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்ப டுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பள்ளியில் ஒருநாளைக்கு 3 முறை தண் ணீர் இடைவேளை மணி அடிக்கப்படும். இது வழக்கமான சத்தத்தில் இருந்து மாறுதல் ஒலியில் ஒலிக்கப்பட வேண்டும். குறிப்பாக காலை 11 மணி, மதியம் 1 மணி, மாலை 3 மணிக்கு வாட்டர் பெல் அடிக்கப் படும். அப்போது குழந்தைகள் தண்ணீர் அருந்த ஊக்குவிக்கப்படுவர். எனினும் பள்ளிகளின் இடைவேளை நேரத்தைப் பொருத்துநேரத்தை மாற்றிக் கொள்ளலாம்.

அதன்படி, வகுப்பறைகளில் தண்ணீர் அருந்த 2 முதல் 3 நிமிடங் கள் அளிக்கப்படும். இதற்காக வகுப்புகளுக்கு வெளியே மாணவர்கள் செல்லக்கூடாது. வகுப்புச் சூழல்களுக்கு இடையூறு நேராதவாறு உள் ளேயே தண்ணீரை அருந்த வேண்டும். பள்ளிகளுக்கு மாணவர்கள் வாட்டர் பாட்டில் கட்டாயம் கொண்டுவர வேண்டும். இதுகுறித்து மாணவர்களுக்கு விளக்கமாக தெரிவிக்கப்பட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments