இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தி: கடந்த சில நாள் களுக்கு முன்பு ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நாய் கடித்து 3 மாதங்களாகியும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொள் ளாததால் உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்தது.
ரேபிஸ் தொற்றுக்குள்ளான நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் அந்த பாதிப்பு மனிதர்களுக்கு ஏற் படுகிறது. நாய்கள் கடிப்பதால் மட்டும் அல்லாமல் அவை பிராண் டினாலும், நமது உடலில் உள்ள காயங்களின் மீது அதன் உமிழ்நீர் பட்டாலும் ரேபிஸ் பாதிப்பு ஏற்படும்.
பொதுவாக நாய் கடி, கீறல் ஏற்பட்டால் அந்த காயத்தை குறைந் தது 15 நிமிஷங்கள் சோப்பு மூலம் தண்ணீரால் கழுவ வேண்டும்.
ஏஆர்வி' எனப்படும் ரேபிஸ் தடுப்பூசிகளை 4 தவணைகளாக செலுத்திக் கொள்வதன் மூலம் அந்த பாதிப்பிலிருந்து விடுபட லாம்.
அனைத்து சுகாதார நிலையங்களிலும், மருத்துவக் கல்லூரி மருத் துவமனைகளிலும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
நாய் கடித்த முதல் நாள், மூன்றாவது நாள், ஏழாவது நாள் மற் றும் 28-ஆவது நாளில் தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள வேண் டும். மேலும், ஆழமான காயமாக இருந்தால் அந்த இடத்தில் இம்யூ னோக்ளோபிலின் தடுப்பூசி கூடுதலாக செலுத்தப்படுகிறது.
எனவே,நாய் மற்றும் செல்லப் பிராணிகள் கடித்தால் அலட்சியப் படுத்தாது பொதுமக்கள் உரிய நேரத்தில் ஏஆர்வி தடுப்பூசி செலுத் திக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்