தமிழகத்தில், 35 தனியார்மருத்துவமனைகளில்,ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் இலவசமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என, பொது சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ், மொத்தம், 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. இத் திட்டத்தின் கீழ் ஆண்டு தோறும், 9.40 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன.
இதில், முதல் தவணைக்கு பின் அடுத்த தவணையை, சில குழந்தை களுக்கு உரிய நேரத்தில் பெற்றோர் செலுத்துவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே, விடுபட்ட குழந்தைகளுக்கு நாளை வரை, தடுப்பூசி போடும் முகாம் உள்ளது. நடைபெற உள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளை போல, குறிப்பிட்ட தனியார் மருத்துவமனை களிலும், இலவசமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.என, பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுபற்றி, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறிய தாவது:
ஒருங்கிணைந்த தடுப்பூசி திட்டத்தில் விடுபட்ட குழந்தைகளுக்கு, தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. அதேபோல, பொது சுகாதாரத்துறையுடன் இணைந்து, 35 தனி யார் மருத்துவமனைகள் இலவசமாக குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தி வருகின்றன.
அந்த மருத்துவமனைகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை விரிவாக்கம் செய்ய பேச்சு நடந்து வருகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்