மாணவிக்கு நேர்ந்தபாலியல் வன்கொடுமைச் சம்ப வத்தின் எதிரொலியாக அண்ணா பல்கலைக்கழகத் தில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அண்ணா பல்கலைக்க முக்த்தில் 2-ஆம் ஆண்டு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள். பெற் றோர்மத்தியில்கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல்வன்முறைச்சம் பவத்தை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் போலீஸ் கட்டுப்பாட்டுக் குள் கொண்டுவரப்பட்டு உள்ளேயும் நுழைவுவாயில்கள் முன்பும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பார்வையாளர்கள், வெளிந பர்கள் சோதனைக்குப் பின் னரே உள்ளே செல்லஅனும திக்கப்படுகிறார்கள். மாணவர்கள், பேராசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் அடையாளஅட்டைஅணிந்திருந்தால் மட்டுமே உள்ள செல்லஅனுமதி அளிக்கப்படுகிறது.
ஏறத்தாழ 190 ஏக்கர்பரப் பளவில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகம் முழுவதும் மரங் கள் சூழ்ந்து காணப்படுகிறது. பாலியல் வன்முறை சம்பவத்தை தொடர்ந்து, எந்தெந்தவகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ளலாம் என்பதை போலீசார் நேற்று 2 ட்ரோன் களை பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்கிடையே, university வளாகத்தில் நிர் வாகம்சார்பில்எடுக்கவேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தொடர்பாக அண்ணா பல்கலைக்கழக பதிவளார் ஜெ.பிரகாஷ், கிண்டிபொறியியல்கல்லூரி டீன்கே.எஸ்.ஈஸ்வரகுமார். அழகப்பா தொழில் நுட்பக் கல்லூரி டீன் எஸ்.மீனாட்சி சுந்தரம், கட்டிடக்கலை கல்லூரிடீன்கே.ஆர்சீதாலட்சுமி மற்றும்துறைத்துலைவர்கள், பேராசிரியர்களுடன் நேற்றுஅவசர ஆலோசனை நடத்தினர். அந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.அதன்படி, பல்க லைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரிய ர்கள், அலுவலக ஊழியர்கள், தொழில் நுட்ப பணியாளர் கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில்ஈடுபட்டுள்ளஊழி யர்கள் அடையாள அட்டை கேட்டால் கண்டிப்பாக காண்பிக்கவேண்டும்.யாரேனும் அடையாள அட் டையை தொலைத்திருந் தால் உடனடியாக மாற்று அடையாள அட்டை வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத் தப்படுகிறார்கள்.
பல்கலைக்கழக்ததில் படிக்கும்மாணவர்களுக்கும் கட்டுப்பாடுகளும் அறிவு றுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. விடுதியில் தங்கி யுள்ள மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்