ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான ஆள் தேர்வு நடைபெற உள்ளது.
தகுதியுள்ளவர்கள் ஜனவரி 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்ட ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள 25 பணியிடங்களுக்கான (ஆண்கள்) ஆள் தேர்வு நடைபெறவுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ள ஆண்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது வரம்பு:-
விண்ணப்பதாரரின் வயது 20 முதல் 45 க்கு உட்பட்டு இருத்தல் வேண்டும்.
கல்வித் தகுதி:- SSLC
இருப்பிட தகுதி -
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், அவரது இருப்பிடமானது. திருவள்ளூர் மாவட்ட காவல் எல்லைக்குள் இருத்தல் வேண்டும்.
பொது தகுதி :-
பொதுநல சேவை, தன்னார்வ தொண்டு செய்ய விருப்பமுடையவராக இருத்தல் வேண்டும்.
மேற்படி தகுதிகள் உள்ள அனைவரும் https://bit.ly/3ZNfZoT என்ற இணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து, பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைத்து, திருவள்ளூர் மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் நேரில் வந்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பப் படிவத்துடன் இணைக்க வேண்டிய ஆவண நகல்கள் -
பிறப்புச் சான்றிதழ்
ஆதார் அட்டை
கல்வி தகுதிக்கான சான்றிதழ்கள்
தற்போதைய புகைப்படம்-2 (Passport Size Photo)
விண்ணப்பங்கள் சமர்பிக்க கடைசி நாள் :- 15.01.2025
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்