ஆசிரியர் மறு நியமன போட்டித் தேர்வை முற்றிலும் நீக்கிட வேண்டும் என்றும் திமுக தேர்தல் அறிக்கை 177 ஐ உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் 11 ஆண்டுகால போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று(24-09-2024) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்ட களத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில தலைவர் வடிவேல் சுந்தர் முன்னிலை வகித்தார். மேலும் இந்த போராட்ட களத்தில் நூற்றுக்கணக்கானோர் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்