தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜாக்) - 31 அம்சக் கோரிக்கை -30.09.2024 மற்றும் 01:10.2024 சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் - மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமை 23.09.2024 காலை 09.15 மணி கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க அழைத்தல்-சார்ந்து.
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிக்டோஜாக்), 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 30.09.2024 மற்றும் 01.10.2024 ஆகிய தேதிகளில் சென்னை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து. கோட்டை மாண்புமிகு தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் தலைமையில் எதிர்வரும் 23.09.2024 (திங்கள்கிழமை) காலை 09.15 மணி அளவில் தலைமை செயலகம், மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அலுவலகத்தில் கோரிக்கைகள் சார்ந்து கலந்தாலோசிக்க தங்களை அழைக்க பணிக்கப்பட்டுள்ளேன். இந்த கலந்தாலோசனைக் கூட்டத்தில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவில் இடம் பெற்றுள்ள சங்கங்களின் சார்பாக ஒவ்வொரு பிரதிநிதி மட்டும் கலந்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்