Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழகத்தில் 50,000 வேலைவாய்ப்புகள் அதிகாரி தகவல்

தமிழகத்தில் 50,000 வேலைவாய்ப்புகள்தரக் அதிகாரி தகவல்



மருந்து தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கான இருநாள் பயி லரங்கு சென்னையில் வெள்ளிக்கிழமை (செப்.20) மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் சுப்ரியா சாகு தொடக்கி வைத்தார்.

அப்போது பேசிய அவர், மருந்து தரக் கட்டுப்பாட்டு துறை யில் நிலவி வரும் சவால்களுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங் களை வகுக்க வேண்டும்' என்றார். முன்னதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி ஸ்ரீதர் பேசியதாவது:மருந்துகளின் தரம், செயல்திறன், பாதுகாப்பு மற்றும் அதற் கான வழிகாட்டுதல்கள் என தரக் கட்டுப்பாடு தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழகத்தில் இணையவழியே மேற்கொண்டு வருகிறோம்.

மருந்து உற்பத்தி, உரிமம் வழங்கல், புதுப்பித்தல் என 48 ஆயிரம் விண்ணப்பங்கள் குறைந்த கால அவகாசத்தில் இணையவழியே பரிசீலிக்கப்பட்டுள்ளன.

மூலப் பெயர் கொண்ட ஜென ரிக் மருந்துகளை விநியோகிப் பதில் உலக அளவில் இந்தியா முதன்மை நாடாக உள்ளது.

அதேபோன்று தமிழகத்தில் உலக அளவில் முன்னணியில் உள்ள ஃபைசர், அஸ்ட்ராஜெனிகா உள்ளிட்ட 40 மருந்து நிறு வனங்கள் உற்பத்தியை தொடங் கியுள்ளன. இதன் மூலம் கடந்த மூன்று ஆண்டுகளில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments