பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்தல் 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு
பிறப்பு பதிவு குழந்தையின் முதல் உரிமை பிறப்பு சான்றிதழ் குழந்தையின் சட்டப்பூர்வ குடியுரிமைக்கான அத்தாட்சி, குழந்தை பிறந்து 1 வருடத்திற்குள் பெயர் பதிவு செய்து பிறப்புச் சான்றிதழ் பெற பிறப்பு . இறப்பு பதிவு சட்டம் 1969இல் தெரிவிக்கப்பட்டுள்ளது குழந்தையின் பெயர் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழ் மட்டுமே முழுமையான பிறப்புச் சான்றிதழ் ஆகும். பெயர் இல்லா பிறப்புச் சான்றிதழினால் அக்குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் எந்த பயனும் இல்லை.
பிறப்புச் சான்றிதழ், குழந்தை பள்ளியில் சேர வாக்காளர் அடையாள அட்டை ஓட்டுநர் உரிமம் பெற, பாஸ்போர்ட், விசா உரிமம், மற்றும் வயது குறித்த முடிவான ஆதாரமாகவும் விளங்குகிறது.
ஒரு குழந்தையின் பிறப்பு. பெயரின்றி பதிவு செய்யப்பட்டிருப்பின் அக்குழந்தையின் பிறப்பு பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 12 மாதத்திற்குள் பெற்றோர் அல்லது காப்பாளர் எழுத்து வடிவிலான உறுதிமொழியை சம்பந்தப்பட்ட பிறப்பு இறப்பு பதிவாளரிடம் அனித்து எவ்வித கட்டணமுமின்றி பெயர் பதிவு செய்திடலாம் 12 மாதங்களுக்குப் பின் பதினைந்து வருடங்களுக்குள் ரூ 200/- தாமதக் கட்டணம் செலுத்தி குழந்தையின் பெயரினை பதிவு செய்திடலாம், 15 ஆண்டுகளுக்கு மேல் குழந்தையின் பெயரை பதிவு செய்ய இயலாது
குழந்தை பிறந்து 15 வருடங்கள் நிறைவடைந்த பின்னும் பெயர் பதிவு செய்யப்படாத நிகழ்வுகளுக்காக, தமிழ்நாடு பிறப்பு இறப்பு விதிகள் 2000-இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மேலும் 5 ஆண்டுகள் (01.01.2020 முதல் 31.12.2024 வரை ) கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் இது போன்ற காலஅவகாச நீட்டிப்புகள் வழங்கப்பட இயலாது என இந்திய தலைமைப்பதிவாளரால் அறிவிக்கப்பட்டடுள்ளது.
கால அவகாச நீட்டிப்பு நிறைவடைய இன்னும் சில மாதங்களே உள்ளன.. 01. 01. 2000 க்கு முன்னர் பதிவு செய்யப்பட்டுள்ள பிறப்புகளுக்கும் . 01.01. 2000 க்கு பிறகு 15 ஆண்டுகள் கடந்த பிறப்பு பதிவுகளுக்கும், குழந்தை பெயர் வைத்து பிறப்பு சான்று பெற 31.12.2024 அன்று கடைசி நாளாகும். எனவே 31.12.2024 -க்குள். பிறப்பு பதிவு செய்யப்பட்டுள்ள ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு அப்பகுதிகளில் உள்ள தொடர்புடைய சார்பதிவாளர் அலுவலகங்களிலும். நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நிகழ்ந்த பிறப்புக்கு சம்பந்தப்பட்ட நகராட்சி மற்றும் மாநகராட்சிகளிலும் விண்ணப்பித்து பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்பு சான்றிதழை பெற்று, குழந்தையின் எதிர் கால நல்வாழ்விற்கு உதவிடும்படி அனைத்து தரப்பு பொது மக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக்கொள்கிறார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்