Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

TN JOB ALERT - தமிழக அரசு வேலை - வாய்ப்பைப் நழுவ விடாதீர்கள்

புதுக்கோட்டை மாவட்ட நலவாழ்வுச் சங்கம் பத்திரிக்கை செய்தி

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.08.2024 மாலை 5.00 மணி


தடுப்பூசி மேலாளர் (Vaccine Cold Chain Manager): காலிப்பணியிடம்-1. மாவட்ட சுகாதார அலுவலகம், புதுக்கோட்டை) கல்வித்தகுதி: Minimum of a Graduation Degree in Business Administration / Public Health / Computer Application/Hospital Management / Supply Chain Management / Refrigerator and AC repair from a reputed University / institution, தகுதியான வயது : 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.23,000-

விபர உள்ளீட்டாளர் (Data Entry Operator): காலிப்பணியிடம்-1 (மாவட்ட சுகாதார அலுவலகம், அறந்தாங்கி) கல்வித்தகுதி: Computer Graduate or any Graduate with Diploma in Computer applications from recognized university. Typewriting Tamil and English (Lower) is desirable, தகுதியான வயது : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: ரூ.13,500-

நடமாடும் மருத்துவக் குழு ஒட்டுநர் (MMU Driver): காலிப்பணியிடம் 1 (பொன்பேத்தி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம்) கல்வித்தகுதி: 8th Pass with heavy Vehicle license and 2 years experience in recognized firm. தகுதியான வயது 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம் : ரூ.13,500

இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP): காலிப்பணியிடம்-2, (ஏனாதி மற்றும் ஒலியமங்களம் துணை சுகாதார நிலையம்) பணியிடம் முற்றிலும் இருப்பிடம் சார்ந்த சேவை பணிகள் என்பதால் தொடர்புடைய பொன்னமராவதி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து வரப்படும் விண்ணப்பங்கள் மட்மே ஏற்றுக்கொள்ளப்படும்.

தற்காலிக ஒப்பந்த செவிலியர் பணியிடங்களுக்கான கல்வித்தகுதி செவிலியர் பட்டயபடிப்பு (Diploma in GNM) அல்லது / இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc Nursing) தேர்ச்சி பெற்றிருக்க

வேண்டும். மேலும், தமிழ்நாடு Nursing Council-லில் பதிவு செய்திருக்க வேண்டும். கொரோனா நோய் தடுப்பு பணிகளில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தால் அதற்கான முன்அனுபவச் சான்று முதல்வர், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அவர்களிடமும், அரசு மருத்துவமனைகள் / தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பணிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்திருந்தால் முன் அனுபவச் சான்று இணை இயக்குநர், மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அவர்களிடமும் சான்று பெற்று இணைக்கப்பட வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா பணிகளில் பணிபுரிந்திருந்தால் மாவட்ட சுகாதார அலுவலர் அவர்களிடம் முன் அனுபவச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும். விளண்ணப்பதாரர் 50 வயதுக்குள் இருக்க வோண்டும். முன்அனுபவச் சான்று கட்டாயமாக இணைக்கப்பட வேண்டும். மேற்கண்ட செவிலியர்களுக்கு மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்களுக்கு (MLHP) ஒப்பந்த மாத ஊதியமாக ரூ.18,000 வழங்கப்படும்.


பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male): காலிப்பணியிடம்-5, (A.மாத்தூர் துணைசுகாதார நிலையம் ஆதனக்கோட்டை வட்டாரம், புனல்குளம் மற்றும் குளத்துராயக்கன்பட்டி துணை சுகாதார நிலையம்-புதுநகர் வட்டாரம், ஒக்கூர் துணை சுகாதார நிலையம், பொன்பேத்தி வட்டாரம், நிலையூர் துணை சுகாதார நிலையம், சிங்கவனம் வட்டாரம்) பணியிடம் முற்றிலும் இருப்பிடம் சார்ந்த சேவை பணிகள் என்பதால் சம்மந்தப்பட்ட வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இருந்து வரப்படும் விண்ணப்பங்கள் மட்மே ஏற்றுக்கொள்ளப்படும். புதுக்கோட்டை மாவட்ட துணை சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள ஒப்பந்த பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male] பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் பன்னிரெண்டாம் வகுப்பில் தாவரவியல் / உயிரியல் / விலங்கியல் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இயக்குநர், பொது சுகாதார துறையினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இரண்டு ஆண்டு சுகாதார பணியாளர் பயிற்சி (MPHW / Heath Inspector Grade-II / Sanitary Inspector தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதற்கான உரிய மதிப்பெண் மற்றும் இயக்குநர், பொது சுகாதாரத் துறையினால் வழங்கப்பட்ட சான்று இணைக்கப்பட வேண்டும். கோவிட்-19 கொரோனா நோய் தடுப்பு பணிகளில் பணியாற்றிய முன்அனுபவம் இருப்பின் அதற்குரிய முன் அனுபவச் சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மேற்கண்ட முன்அனுபவச் சான்று அம்மாவட்ட துணை இயக்குநர், சுகாதாரப் பணிகள் அவர்களிடம் பெறப்பட்டு விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரரின் இருப்பிடத்திற்கான உரிய சான்று கட்டாயம் இணைக்கப்பட வேண்டும். மொத்த ஒப்பந்த பல்நோக்கு சுகாதார பணியாளர் / சுகாதார ஆய்வாளர் நிலை-II (MPHW-Male) காலிப்பணியிடம் ஐந்து (5), இப்பணியிடத்திற்கான ஒப்பந்த மாத ஊதியம் ரூ.14,000- வழங்கப்படும்.


நகர்புற துணை செவிலியர் (ANM): காலிப்பணியிடம்-2 (கோட்டை, களப்பக்காடு நகர்புற துணை சுகாதார நிலையம்-எல்.என்புரம் ஆரம்ப சுகாதார நிலையம்) அறந்தாங்கி நகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதிகளில் இருந்து வரப்படும் விண்ணப்பங்கள் மட்மே ஏற்றுக்கொள்ளப்படும்.

கல்வி தகுதி:ANM Two years recognized course, Tamilnadu Midwife Council Registration, தகுதியான வயது : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம்: 5. 14,000.

மருத்துவமனை பணியாளர் (MPHW/Support Staff: காலிப்பணியிடம்-1, (எல்.என்புரம் நகர்புற ஆரம்ப சுகாதார நிலையம்) அறந்தாங்கி நகராட்சி பகுதிக்குட்டபட்ட பகுதிகளில் இருந்து வரப்படும் விண்ணப்பங்கள் மட்மே ஏற்றுக்கொள்ளப்படும் . கல்வித்தகுதி: 8 Pasa தகுதியான வயது : 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் ஆதரவற்ற விதவை மற்றும் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அதற்கான சான்றிதழ் உரிய அலுவலரிடம் பெற்று இணைக்கப்பட வேண்டும். ஒப்பந்த மாத ஊதியம் : 8,500.

மேற்கண்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை https://pudukkottai.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை 20.08.2024 முதல் 31.08.2024 வரை புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622 001 என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் வழியாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.08.2024 மாலை 5.00 மணி வரை மட்டுமே. அதன் பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது மேலும், பணியிடங்களின் எண்ணிக்கை மாறுதலுக்குட்பட்டது எனவும், வரும் காலங்களில் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.







Post a Comment

0 Comments