இந்தியாவின் ஆழமாக வேரூன்றிய விளையாட்டு, பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையில் ஹாக்கி ஜாம்பவான் மேஜர் தியான் சந்தின் பிறந்தநாளாக ஆகஸ்ட்29 ஆம் தேதியை இந்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடுகிறது. சர்வதேச அரங்கில் நாட்டிற்கு விருதுகளைக் கொண்டு வருவதில் அவர்களின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக நாட்டின் விளையாட்டுச் சின்னங்களை கௌரவிக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது.
அதன்படி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருப்பத்தூர் மாவட்ட பிரிவின் சார்பில் வருகிற 29ஆம் தேதி (வியாழக்கிழமை ஜோலார்பேட்டை சிறு விளையாட்டரங்கத்தில் கூடைப்பந்து போட்டி மற்றும் ஓட்ட பந்தய போட்டி நடத்தப்பட உள்ளது. அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பாலருக்கும் 19 வயதிற்கு உட்பட்டோர், 25 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்ட போட்டியிலும், 45 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் 100 மீட்டர் ஓட்ட போட்டியிலும் கலந்து கொள்ளலாம். இப்போட்டிகள் காலை 7 மணிக்கு நடைபெறும், போட்டியில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர், வீராங்களைகள் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டரங்கத்தில் காலை 6 மணிக்குள் நேரில் பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்