மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் மிஷன் வத்சல்யா திட்டத்தை செயல்படுத்தி வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் அலுவலகத்தில் பணிபுரிய மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் ஒப்பளிக்கப்பட்ட பாதுகாவலர் பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிக அடிப்படையில் தினக்கூலி முறையில் பணிபுரிய 31.08.2024 வரை தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு பற்றிய விவரங்கள்:
பாதுகாவலர் (Watchman)
வயது(18-40)
8-ம் வகுப்பு தேர்ச்சி, ஓட்டுநர் உரிமம் உடைய நபர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நிபந்தனைகள்:
1. இப்பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யபடலாகாது.
3. இப்பணியிடம் தினக்கூலி பணியிடம் என்பதால் ஊதியம் தவிர்த்து பணியாளருக்கு வேறு எவ்வித படிகளும் வழங்கலாகாது.
4. பணியில் சேர்வதற்கு சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் வழங்கப்பட வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ள நபர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவர அறிக்கையை கீழ்க்காணும் முகவரிக்கு 31.08.2024 ம் தேதிக்குள் தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ அளிக்கலாம்.
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
3-வது தளம், கூடுதல் கட்டிடம்,
மாவட்ட ஆட்சியரகம்,
மதுரை - 625 020
சம்பளம் விவரங்கள்:12,584/- (மாதம்)
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்