மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று (13.04.2024)முதல் (21.04.2024)ஆம் தேதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கான முழு ஆண்டு மற்றும் பருவ தேர்வுகள் ஏப்ரல் இரண்டாம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் ஐந்தாம் தேதியுடன் தேர்வுகள் முடிவடைந்து 6-ம் தேதி முதல் கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ரம்ஜான் பண்டிகை காரணமாக நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் ஏப்ரல் 22 மற்றும் 23ஆம் தேதிகளுக்கு தள்ளி வைக்கப்பட்டன.
மேலும்,மக்களவைத் தேர்தலை முன்னிட்டு பெரும்பாலான பள்ளிகள் தேர்தல் முகாம்களாக செயல்பட இருக்கின்றன. இத்துடன் ஆசிரியர்களும் தேர்தல் பணிகளின் ஈடுபடுத்தப்பட உள்ளனர். எனவே இதனைத் தொடர்ந்து நான்காம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 13-ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 9 நாட்கள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்