Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரையாண்டு தேர்வு விடுமுறை! பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல் - பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்

அரையாண்டு தேர்வு விடுமுறை! பெற்றோர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை முக்கிய அறிவுறுத்தல் - பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள்

பார்வை (1) இல் காண் தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தில் அரசு/ அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த பிறகு 24.12.2025 (புதன் கிழமை) முதல் 04.01.2026 (ஞாயிற்றுக் கிழமை) வரை விடுமுறை அளிக்கப்பட்டு, 05.01.2026 திங்கட்கிழமை அன்று முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படுவதாகவும், அரையாண்டு விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டாம் என அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி விடுமுறை நாட்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய சில முக்கிய நடவடிக்கைகள் குறித்து கீழ் கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

@h_pongilath

மாணவர்கள் விடுமுறை நாட்களில் கடல், ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை போன்ற நீர் நிலைகளில் குளிப்பதற்கு பெற்றோர் அனுமதிக்க வேண்டாம்.

மாணவர்களின் வளர்ச்சிக்கு சமச்சீரான உணவு அளிப்பது அவசியம்.

இசை, நடனம் மற்றும் ஓவியம் போன்றவற்றில் ஆர்வம் உள்ள மாணவர்களை விடுமுறை நாட்களில் இவற்றை கற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

தாத்தா, பாட்டி உள்ள வீடுகளில் சேர்ந்து உணவு அருந்த ஊக்குவிக்கவும், பெரியோர்களை மதிக்கவும் அவர்களுக்கு உதவி செய்யவும் பழக்கப்படுத்த வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை மாணவர்களின் பெற்றோர் கவனத்திற்கு கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Post a Comment

0 Comments