ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் அறிவித்துள்ள முக்கிய செய்தி- 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை பொது தேர்வு நடத்தும் திட்டம் 2025- 2026 ஆம் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
CBSE மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும் எனவும் ,மாணவர்கள் விருப்பப்படி ஒரு முறை அல்லது இரண்டு முறையும் தேர்வை எழுதி கொள்ளலாம் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
மாணவர்களின் செயல் திறன் எந்த தேர்வில் சிறப்பாக உள்ளதோ அதன் மதிப்பெண்கள் கணக்கீடு எடுத்துக் கொள்ளப்படும் யாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் தேர்வு குறித்த மாணவர்களின் பதட்டத்தை தணிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மத்திய அரசின் இந்த திட்டத்தில் அனைவரும் இரண்டு முறை தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயம் இல்லை எனவும்,இரண்டு முறை எழுதினாலும் அதில் எதில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளார்களோ அதுதான் கணக்கில் கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்