Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தேசிய தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம்(PM National Apprenticeship Mela)

தேசிய தொழிற் பழகுநர் ஆள் சேர்க்கை முகாம்(PM National Apprenticeship Mela)


மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.

பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற10.01.2024 அன்று காலை 9.00 மணியளவில வட சென்னை-21 ஆர்.கே.நகர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (வட சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவணங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர். 

தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும். இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சிநிலையங்களில் தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in  இணையதள முகவரியில் பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம் முகாமில் கலந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments