மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், சென்னை மற்றும் இந்திய அரசு, தென் மண்டல திறன் மேம்பாடு மற்றும தொழில் முனைவு இயக்ககம் இணைந்து ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது.
பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியார்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற்பழகுநர் முகாம் (PM National Apprenticeship Mela) வருகிற10.01.2024 அன்று காலை 9.00 மணியளவில வட சென்னை-21 ஆர்.கே.நகர். அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் (வட சென்னை அரசினர் தொழிற் பயிற்சி நிலைய வளாகத்தில்) நடைபெற உள்ளது. இதில் அரசு மற்றும் தனியார் தொழிற்நிறுவணங்கள் கலந்துகொண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க ஐ.டி.ஐ. படித்து தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் 8, 10, 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை தொழிற்பழகுநராக தேர்வு செய்ய உள்ளனர்.
தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000/- மற்றும் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் (National Apprenticeship Certificate) வழங்கப்படும். இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி (NAC) முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சிநிலையங்களில் தேர்ச்சிபெற்ற பயிற்சியாளர்கள் www.apprenticeshipindia.gov.in இணையதள முகவரியில் பதிவு செய்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் இம் முகாமில் கலந்து கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்