ஜனவரி 05 சென்னை மாவட்டத்தில் உள்ள மண்டலங்களில் வருகின்ற 05.01.2024 முதல் 27.01.2024 வரை மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்கள் நடைபெறவுள்ளது. சுய தொழில் தொடங்க விரும்புவோருக்கு, வங்கி கடன் பெற இம்முகாம்களில் பதிவு செய்து கொள்வதன் மூலம் விரைவில் பயன் பெறலாம்.
சென்னை மாவட்டத்தில் சுய வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில், மண்டல இணை இயக்குநர் அலுவலகம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுதிட்டம், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், பிரதமமந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்குதல் திட்டம், பிரதம மந்திரியின் உணவுபதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
ஆர்வமுள்ள தகுதிவாய்ந்த இளையோரும், பொதுமக்களும், புகைப்படம், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை, விலைப் பட்டியல் மற்றும் திட்ட அறிக்கை ஆகிய ஆவணங்களுடன் வருகை தந்து மண்டல இணை இயக்குநர் அலுவலர்கள் மூலமாக இணையதளத்தில் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கடன் திட்ட விண்ணப்பம் உடனடியாக வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டு கடன் பெற்று தொழில் நிறுவனம் தொடங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். வருகிற 05.01.2024 முதல் 27.01.2024 வரை சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்களில் கலந்து கொண்டு, தொழில் முனைவோர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்