கலைஞர் மகளிர் உரிமை தொகைக்கு மேல்முறையீடு செய்த நபர்களுக்கு இந்த மாதமே வங்கி கணக்கில் 1000 ரூபாய் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பெண்களின் முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் வாழ்வினை வளப்படுத்திடும் பொருட்டும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 15.09.2023 அன்று துவக்கி வைக்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்து செயல்படுத்தி வரும் அரிய திட்டங்களினாலும், செயல்பாடுகளினாலும் தமிழகம் அனைத்துத் துறைகளில் இந்தியாவிற்கே முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.
இத்திட்டத்தில் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், 1,06,50,000 மகளிர் தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கான தொகை அவர்களுடைய வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகைக்கு மேல்முறையீடு செய்த தகுதியானவர்களுக்கு இம்மாதம் முதலே வரவு வைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கோரி 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்துள்ளனர்.
இதனை தொடர்ந்து, ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்காக மேல்முறையீடு செய்தவர்களுக்கு தகுதி உள்ளவர்களுக்கு இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு முன்பாகவே வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்