தேசியவருவாய்வழிமற்றும்தகுதிபடிப்புதவித்தொகை திட்டத்தேர்வூபிப்ரவரி 2024 NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS) FEB 2024
அறிவிப்பு
தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் திட்டத்தின் கீழ் படிப்புதவித்தொகை 2023-2024 ஆம் ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது. உதவித் தொகை வழங்க மாணவர்களைத் தெரிவு செய்யும் பொருட்டு தேசிய வருவாய்வழி மற்றும் தகுதி படிப்புதவித் தொகை திட்டத்தேர்வு (NMMS) அனைத்து வட்டார அளவில் (Block Level) தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 03.02.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கான வெற்று விண்ணப்பங்களை 04.12.2023 முதல் 19.12.2023 வரை இத்துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கதகுதியுடையோர்;
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் (அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும்அரசு உதவி பெறும் பள்ளிகள் மட்டும்) 2023- 2024 கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவியர் அவர்தம் பெற்றோரின் குடும்ப ஆண்டு வருமானம் 3,50,000/- ) ரூபாய் மூன்று இலட்சத்து ஐம்பதாயிரம் மட்டும்) மிகாமல் இருந்தால் மட்டுமே இத்தேர்வு எழுத தகுதியுடையவர் ஆவார்.
விண்ணப்பிக்கும்முறை;
1 NMMS- தேர்விற்கு விண்ணப்பிக்க விருப்பமுடைய தேர்வர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க இயலும். 'தலைமையாசிரியர்கள் தேவையான வெற்று விண்ணப்பங்களை 04.12.2023 முதல் 19.12.2023 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
2. தலைமை ஆசிரியர்கள் வெற்று விண்ணப்பங்களை நடப்புக் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் தகுதியுடைய மாணவர்களிடம் கொடுத்து பெற்றோர் உதவியுடன் பூர்த்தி செய்தல் வேண்டும்.
3. புகைப்படம் ஒட்டி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வர்கள் தாம் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஆன்லைன் கட்டணம் ரூ.50/- உடன் 05.12.2023 முதல் 19.12.2023-க்குள் ஒப்படைத்தல் வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்