ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று வெளியிட்டுள்ள செய்தி
ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை-06
பத்திரிக்கை செய்தி
2019-2020 முதல் 2021-2022 ஆம் ஆண்டுகளில் வட்டாரக் கல்வி அலுவலர் அறிவிக்க எண் 1/2023, ன்படி05.06.2023 அன்று நடைபெற இருந்த வட்டாரக் கல்வி அலுவலருக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டும் மற்றும் பணிநாடுநர்களின் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டும் ஒத்திவைக்கப்பட்டது.
இச் சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது வருகின்ற 14.12.2023 அன்று நடைபெறும் என பணிநாடுநர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
பணிநாடுநர்கள் 04.12.2023 அன்று நடைபெற இருந்த சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தினையே 14.12.2023 அன்று நடைபெறவுள்ள சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பயன்படுத்தலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்