விவசாயிகளுக்கான முக்கிய செய்தி:குறைந்த நீரில் அதிக மகசூல் பெற புதிய உத்தி
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் துளி நீரில் அதிக பயிர்கள் திட்டத்தில் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள் அமைத்திட சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.
நடப்பு நிதியாண்டிற்கு அரசிடமிருந்து 800 எக்டர் பரப்பிற்கு பதிவு செய்திட இலக்கு பெறப்பட்டு, முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு சொட்டு நீர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விவசாயிகள் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் MIMIS என்ற இணைப்பில் பதிவு செய்யலாம் அல்லது விவசாயிகள் தங்கள் பகுதியின் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் கணினிச் சிட்டா, அடங்கல், சிறு குறு விவசாயி சான்று, ஆதார் அட்டை நகல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம், மண் மற்றும் நீர்ப் பரிசோதனை மாதிரி முடிவுகள் போன்ற ஆவணங்களைக் கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.
நுண்ணீர் பாசனம் அமைப்பதனால் ஏற்படும் பயன்கள், குறைந்த நீரில் அதிக சாகுபடி பரப்பு மேற்கொள்ளலாம். களைகள் எளிதாக கட்டுப்படுகிறது. உரம் செலுத்துவது எளிதாகிறது. நிலக்கடலை மற்றும் பயறுவகை பயிர்களுக்கு தெளிப்பு நீர் நன்கு பயனளிக்கிறது. கரும்பு, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைத்திடலாம்.
சொட்டுநீர் பாசன அமைப்பின் மூலம் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு உரம் செலுத்தும் அமைப்பின் வழியாக உரங்களை எளிதாகவும், விரயமின்றி, வேர்பகுதிக்கு அருகில் செலுத்த முடியும். இதனால் உரச்செலவு குறைவதோடு பயிரின் வளர்ச்சியும் சீராக இருப்பதால் குறைவான செலவு மற்றும் குறைவான நீர் பயன்பாட்டில் கூடுதல் மகசூல் மற்றும் லாபம் கிடைக்கிறது.
எனவே, நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் வட்டாரத்தில் உள்ள வட்டார வேளாண் விரிவாக்க மையத்தினை அணுகிபயன்பெறலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்