Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் கல்வி உதவித் தொகை பெற கல்லூரி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கல்லூரி மாணவர்களுக்கான பிரதமரின் கல்வி உதவித்

தொகை திட்டத்தின்கீழ் பயன்பெற வரும் டிச.31-ஆம் தேதி வரை விண்ணப் பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத் துறை மூலம் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப் பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவ, மாண வியருக்கு பிரதமரின் மேற்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டம், ஆண்டுதோ றும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளநிலை பட்டப்படிப்பு பயிலும் மேற்குறிப்பிட்ட பிரிவுகளைச் சேர்ந்தோருக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப்ப டுகிறது. இளநிலை (தொழிற்படிப்பு) முதுநிலை பட்டம், பாலிடெக்னிக் உள் ளிட்ட பிற படிப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2,50,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

நிகழாண்டில் கல்வி உதவித் தொகை திட்டத்துக்கு மாணவ, மாண விகளுக்கு கல்லூரிகளில் வழங்கப்பட்டுள்ள பல்கலைக்கழக மேலாண்மை தகவல் அமைப்பு எண் மூலம் http://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.

மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக்கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி, http://umis.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைப் பெற வரும் டிச.31 வரை விண்ணப்பிக்கலாம்.

இதுதொடர்பான சந்தேகங்களுக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை யினர் நல அலுவலரை, அலுவலக நேரங்களில் அணுகி விவரங்களைப் பெற் றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments