இரவுக்கு காவலர் பதவிக்கான அறிவிப்பு(Notification)
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், திருப்பூர் உபகோட்டம், உதவி செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சி) அலுவலகத்தில் அரசு தலைப்பில் ஊதியம் வழங்கப்படும் பணியிடங்களில் காலியாகவுள்ள இரவுக்காவலர் பணியிடத்தினை நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 29.11.2023 முதல் 13.12.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலையின் பெயர்: இரவு காவலர்
நிபந்தனைகள்:
1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை https://tiruppur.nic.in இணையதளத்திலும் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளத்திலும் (National career service portal) www.ncs.gov.in உள்ள விண்ணப்ப படிவதனை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.
2. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து 29.11.2023 முதல் 13.12.2023 வரை அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சிப்பிரிவு) அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது பதிவு அஞ்சல் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும்.
3. இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்ப படிவத்தில் உள்ள விவரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத (கல்வி, வயது, இனச்சுழற்சி) விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.
4. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.
5. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முக தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும்.
6. தகுதியில்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
வரும் 7. காலதாமதமாக பரிசீலிக்கப்படமாட்டாது. விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும்
8. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு.
APPLICATION -CLICK HERE
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்