Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான அறிவிப்பு -கட்டணமில்லா பயிற்சி வகுப்பு

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுவாரியம் நடத்தும் இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் 3359 பதவிகளுக்கான பொதுத்தேர்வு-2023 அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 




குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு/SSLC அல்லது அதற்கு சமமான கல்வித்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு-பொது விண்ணப்பதாரர்கள் 01.07.2023 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் மற்றும் 26 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பு தளர்வு கீழ்க்கண்டவாறு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணியிடங்களுக்கு 18.08.2023 முதல் 17.19.2023 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in ஆகும்.

கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள், சென்னை, கிண்டியில் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் 25.08.2023 அன்று துவங்கப்பட உள்ளது. மேலும். கண்ணகி நகர் எழில் நகர் தன்னார்வ பயிலும் வட்டம் இலவச பயிற்சி மையத்திலும் 25.08.2023 அன்று துவங்கப்பட உள்ளது. 

இம்மையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் வாழும் படித்த தகுதி வாய்ந்த இளைஞர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இப்பயிற்சி வகுப்பிற்கு சேர. விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் மேற்குறிப்பிட்ட நாளில் சென்னை - 32. கிண்டி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக கலந்து கொள்ளலாம். இப்பணிகாலியிட தேர்வு தொடர்பான தகுதி மற்றும் இதர விவரங்களுக்கு, https://www.tnusrb.tn.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.

Post a Comment

0 Comments