Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாற்றுத்திறனாளிகளுக்கான மின்னணு பிரெய்லி வாசிப்பு கருவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பட்ட மேற்படிப்பு படிப்பவர்கள் அல்லது போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் பிரெய்லி எழுத்துக்களை வாசிக்கும் திறனுடைய பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு பிரெய்லி முறையில் கற்பதற்கு ஏதுவாக மின்னணு வடிவில் உள்ள புத்தகங்களை (e-book) பிரெய்லி எழுத்துக்கள் வடிவில் தொடு உணர்வுடன் அறிய உதவும் வாசிக்கும் கருவி (Electronic Braille Reader) மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக மூலமாக வழங்கப்படவுள்ளது.

 இளங்கலை பட்டப்படிப்பு முடித்து, தற்போது பட்ட மேற்படிப்பு படித்து வருபவராகவோ அல்லது ஆசிரியர் தேர்வாணையம் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தேர்வுக்கு படித்து வருபவர்களாகவோ மேலும் பிரெய்லி எழுத்துக்களை படிக்க திறன் படைத்தவராக இருத்தல் வேண்டும்.

எனவே மேலே குறிப்பிட்ட தகுதிகளுடைய பார்வைத்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும்) உணவு பொருள் வழங்கல் அட்டை (ரேசன் கார்டு). ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை ஆகியவற்றின் நகல்கள். படிப்பவராயின் கல்லூரியிலிருந்து பெறப்பட்ட ஆளரி சான்று (Bonafied Certificate) போட்டித் தேர்விற்கு படித்து வருபவராக இருந்தால் அதற்கான சான்று மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2 ஆகியவற்றுடன் திருச்சிராப்பள்ளி கண்டோன்மென்ட் மாவட்ட நீதிமன்ற வளாக பின்புறம் அமைந்துள்ள மாவட்ட நல அலுவலகத்தில் 31.07.2023க்குள் நேரில் வந்து விண்ணப்பித்து பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 0431-2412590-60 தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments