Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TET - ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

சென்னை DPI வளாகத்தில் 5 நாட்களாக நடைபெற்று வந்த ஆசிரியர்களின் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் சனிக்கிழமை திரும்பப்பெறப்பட்டது.




Tamil Nadu Higher Education Minister பொன்முடி அவர்கள் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிடுவதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வில் ( Teacher Eligibility Test)தேர்ச்சிபெற்றவர்களுக்கு அரசு ஆசிரியர் பணி வழங்க வேண்டும்.

TEACHER ELIGIBILITY TEST- ல் தேர்ச்சி பெற்றாலும் பணிநியமனம் பெறபோட்டித்தேர்வில் தேர்ச்சிபெறவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஆசிரியர் நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 57-ஆக உயர்த்த வேண்டும். ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி Teacher Eligibility Test -ல் தேர்ச்சி பெற்ற நலச்சங்கம் சார்பில் சென்னை DPI கடந்த மே 9 முதல் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தப் போராட்டத்துக்கு பாமக, நாம் தமிழர், BJP, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் நேரில் வந்து ஆதரவைத் தெரிவித்த இந்த நிலையில் போராட்டம் நடைபெற்ற DPI வளாகத்துக்கு சனிக்கிழமை நேரில் வந்த அமைச்சர் பொன்முடி ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தைகள் Teacher Eligibility Test- ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் கோரிக்கைகள் Tamilnadu chief minister கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என்றும் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என உறுதியளித்தார். இதையடுத்து ஆசிரியர்களின் போராட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments