திருப்பூர் மாவட்டத்தில் இயங்கி வரும் கீழ்க்காணும் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா (KGBV) பெண்கள் உண்டு உறைவிடப்பள்ளிகளுக்கு பட்டியலில் குறிப்பிட்டுள்ள பாடப்பிரிவுகளுக்கு குறைந்தபட்சம் இளங்கலை பட்டத்துடன் B.Ed மற்றும் TET இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்ற பெண் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பங்களை நேரில் பெற்று 04.08.2025 தேதிக்குள் அந்தந்த பள்ளிகளின் நிர்வாகிகளுக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ தனித்தனியாக அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பத்தில் கல்வித் தகுதி, அனுபவம், பிறந்த தேதி, இருப்பிட முகவரி மற்றும் அலைபேசி எண்கள் போன்றவற்றை தெளிவாக குறிப்பிடவும். தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுப்பூதியத்தில் தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும்.
மாதாந்திர தொகுப்பூதியம்- விடுதிக்காப்பாளர்- ரூ.29,000/- விடுதிக்காப்பாளரே தலைமை ஆசிரியையாகவும் செயல்பட வேண்டும். ஆசிரியைக்கு மாதாந்திர தொகுப்பூதியம்- ரூ.24,000/- வழங்கப்படும். ஆசிரியைகள் சுழற்சி முறையில் விடுதியில் தங்கி பணியாற்ற வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்