UPI பண பரிவர்த்தனை பற்றிய முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
UPI எனும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகர்கள் பணப்பரிவர்த்தனைகளுக்கு மட்டும் தான் கட்டணம் வசூலிக்கப்படும் என தேசிய பணப் பரிவர்த்தனை நிறுவனம் (என்பிசிஐ) தெரிவித்துள்ளது.
பற்று மற்றும் கடன் அட்டை பயன்பாட்டுக்கு மாற்றாக கடந்த 2016- இல் யுபிஐ பணப் பரிவர்த்தனை தொடங்கப்பட்டது. PAYTM, GOOGLE PAY, PHONEPE, RUPAY உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்கள் UPI பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.
இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை என்பதால், UPI APP-களில் தங்களின் வங்கிக் கணக்கை இணைத்து இந்தச் சேவையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரூ.2,000-க்கும் மேல் UPI பணப் பரிவர்த்தனை செய்தால் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் 1.1 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும் என்று என்பிசிஐ சுற்றறிக்கை வெளியிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஊடகங்களில் ஏராளமானோர் கருத்துகளைப் பதிவிட்டனர்.
இதுகுறித்து என்பிசிஐ புதன்கிழமை அளித்த விளக்கத்தில் mobile wallet போன்ற பிபிஐ வணிகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே (ரூ.2,000-க்கு அதிகமாக பணம் send போது) 1.1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும். UPI பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கிக் கணக்குகளுக்கு இடையே மேற்கொள்ளப்படும் UPI பணப் TRANSACTION கட்டணம் இல்லைஎனத் தெரிவித்துள்ளது.
அதாவது மாற்று நிறுவன Mobile wallet இருந்து வாடிக்கையாளர் செலுத்தும் UPI பணத்தை கடைக்காரர் வேறு நிறுவனத்துக்கு மாற்றம் செய்வதற்கான சேவைக் கட்டணமாக வணிகர்களிடம் 1.1 சதவீதம் வசூலிக்கப்படும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்