Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை-அலுவலக உதவியாளர் வேலை!




தூத்துக்குடி மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகினை சார்ந்த தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 


இரவுக்காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் பணி நியமனத்திற்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள் இரவுக்காவலர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிட விபரம் இன சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை தூத்துக்குடி மாவட்டத்தின் www.thoothukudi.nic.in இணையதளத்தின் இப்பணியிடத்திற்கான விவர்ணப்பங்களை 07.03.2023 தேதி முதல் மேற்படி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், மற்றும் விண்ணப்பங்கள் 07.03.2023 தேதி முதல் 07.04.2023 தேதி வரை அலுவலக வேலை நேரத்தில்  தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.


தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஒன்றிய தலைப்பில் காலியாக உள்ள 2 அலுவலக உதவியாளர் மற்றும் 1 இரவு காவலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்

1. அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

2.இரவுக்காவலர் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.



நிபந்தனைகள்

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம்,‌சாதிச்சான்று, முன்னுரிமைச் சான்று, மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பவேண்டும்.

2. இனசுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

4. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும். 5. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/-அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1 (10°4) inches postal cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

7. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

8. நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

9. விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

10.நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு உண்டு.


Post a Comment

0 Comments