Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN ARATTAI CHANNEL-CLICK HERE

JOIN TELEGRAM GROUP-CLICK HERE

JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

பொது தேர்வு விடைத்தாளை திருத்தபடும் ஆசிரியர்களுக்கான முக்கிய செய்தி-வழிகாட்டுதல்கள் வெளியீடு

பொதுத்தேர்வு விடைத் தாளை திருத்தும் பணியில் ஈடுபடும் முதன்மை தேர்வாளர்கள்(ஆசிரியர்கள்), கூர்ந்தாய்வு அலுவலர்கள், உதவி தேர்வாளர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்: முதன்மை தேர்வாளர் கள், கூர்ந்தாய்வு அலுவலர்கள் மதிப்பீடு செய்த விடைத்தாள்களில் மதிப் பெண்களில் அதிகளவில் வேறுபடுகள், மறுகூட்டல், மறுமதிப்பீடுகளின்  போது கண்டறியப்பட்டு தேர்வர்கள் நீதிமன்றத்தில்வழக்கு தொடுக்கும் நிகழ்வுகள் ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில், மதிப்பீடு செய்யும் போது மிகவும் கவனமுடனும், விழிப்புடனும் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன. மாணவர் விடைத்தாளில் நடுவில் இரு பக்கங்களில் எழு தாமல் விட்டு அடுத்து வரும் தாளில் எழுதியிருந்தால் அதனை மதிப்பீடு செய்யாததும் நடக்கிறது. இதன் மூலம் முதன்மை தேர்வாளர்கள் கூர்ந்தாய்வு அலுவலர் பணியினை சரிவர கவனிக்கவில்லை என்பது தெரியவருகிறது.

உதவித் தேர்வாளர்களால் விடைக் எடுக்கப்படும். குறிப்பின்படி மதிப்பீடு செய்து உரிய மதிப்பெண் வழங்கப்பட்ட பின்னர், முதன்மை கண்காணிப்பாளர், கூர்ந் தாய்வு அலுவலர் மீண்டும் சரிபார்க்கும் போது கவனக்குறைவால் அதிகபட்ச மதிப்பெண்களைவிட கூடுதலாக வழங்கியது குறித்து தகவல் அறி யும் உரிமை சட்டத்தின்கீழ் புகார் பெறப்பட்டது. இதனால் தேர்வுதுறைக்கு அவப்பெயர் ஏற்படும் நிலையும் ஏற்பட்டது இது போன்ற நிகழ்வை தவிர்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

கைப்பேசி பயன்பாடு கூடாது: மதிப்பீட்டு பணியின்போது தேவையில்லாமல் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல, கைப்பேசியை விடைத்தாள் திருத்தும் அறையில் எக்காரணத்தை கொண்டும் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்தியது கண்டறியப்பட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

மதிப்பீடு செய்ததில் அதிக வேறுபாடுகள் கண்டறியப்பட்டால், சம் பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவான கூட்டல் பிழை இருந்தால், கூர்ந்தாய்வு அலுவலர் முழு பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments