பாரத பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படும் பயனாளிகளுக்கு ஒன்றிய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து மானியத் தொகையாக ரூ.1,20,000/-ம், தமிழ்நாடு அரசின் சார்பில் மேற்கூரை அமைக்க ரூ.50,000/- மற்றும் மாநில அரசின் கூடுதல் நிதியாக ரூ.70,000/- ஆக மொத்தம் ரூ.2,40,000/- வழங்கப்படுகிறது.
இது தவிர மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 90 மனித சக்திகளுக்கான தொகை ரூ.25,290/-ம் கழிப்பறை அமைக்க மானியமாக ரூ.12,000/- வழங்கப்படுகிறது. ஒரு வீடு கட்டுவதற்கு ரூ.2,77,290/- (ரூபாய் இரண்டு இலட்சத்து எழுபத்தேழாயிரத்து இருநூற்று தொண்ணூறு மட்டும் ) பயனாளிக்கு வழங்கப்படுகிறது.
மேலும், வீடு கட்ட தேவையான சிமெண்ட் மூடைகளுக்கு ஒரு மூடை ரூ.216/- விலையிலும் மற்றும் 320 கி.கி. இரும்பு கம்பிகள் குறைந்த விலையிலும் அந்தந்த ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வழங்கப்படுகிறது.
மேலும், மகளிர் குழுவில் உள்ள பயனாளிகளுக்கு மகளிர் திட்டம் மூலம் குறைந்த வட்டி விகிதத்தில் சமுதாய முதலீட்டு நிதியின் மூலம் கடனுதவி வழங்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்