Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை- டிகிரி முடித்திருந்தால் போதும்-15000 ரூபாய் சம்பளம்




தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் வாழ்வாதார நடவடிக்கைகளைமேற்கொள்ள வையம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள வட்டார இயக்க மேலாளர் பணி மற்றும் மருங்காபுரி ஊராட்சி ஒன்றியத்தில் காவியாகவுள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணி ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளது.

எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் வருகின்ற 24.02.2023 அன்றுக்குள் விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கான தகுதிகள் பின்வருமாறு:
வட்டார இயக்க மேலாளர் பதவிக்கான தகுதிகள் : ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
1. குறைந்தது 6 மாத காலத்துடன் MS Office தகுதிச்சான்றிதழ்படிப்பு. 
2. கணினி அறிவியல் அல்லது கணினி பயன்பாட்டியல் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை. 

2.வயது
28 வயதிற்க்குட்பட்டவர்கள்

3 அனுபவம்:
குறைந்தது 3 வருடம்

4 இடம்:
திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்குட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

5 ஊதியம் பிரதி மாதம்:ரூ.1500/-

விதி தளர்வு:
பதவி உயர்வுமூலம் நியமனம் செய்யப்படுபவர்கள் அதிகபட்சமாக1/3 காலிப்பணியிடங்கள். வட்டார  ஒருங்கிணைப்பாளர்களுக்கு 3 வருட பணி அனுபவம் மற்றும் 80% செயல்திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் விதி தளர்வுகள் வழங்கப்படும். (மேற்குறிப்பிட்ட தளர்வுகள் மூலம் விண்ணப்பிப்பவர்களுக்கு 40 வயது வரை உள்ளவர்களுக்கு பொருந்தும்).

வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தகுதிகள் :

1 கல்வித்தகுதி:ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
குறைந்தது 6 மாத காலத்துடன் MS Office தகுதிச் சான்றிதழ் படிப்பு

2.வயது:28 வயதிற்க்குட்பட்டவர்கள்

3அனுபவம்:குறைந்தது 2 வருடம்

4.இடம்:சொந்த வட்டத்திற்குட்பட்டவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

5.ஊதியம் பிரதி:மாதம்12000/-

மேற்படி தகுதி உள்ள நபர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ்க்காணும் முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பணம். விண்ணப்பம் அனுப்பு வேண்டிய கடைரி நாள்:- 24.02.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி

இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மகளிர் திட்டம், மாவட்ட ஆட்சியரக வளாகம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும், மேலும் விபரங்களுக்கு மின்னஞ்சல் முகவரி- dplu trc@vahoo.com தொலைப்பேசி எண் -0431-2412726 என்ற தொலைப்பேசி எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.


Post a Comment

0 Comments