Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் நுழைவுத் தேர்வு எழுதுவதற்கு வழிகாட்டுதல்வழங்குதல்- முழு விவரங்கள்

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் நுழைவுத் தேர்வுகள் எழுதி உயர்கல்வி படிப்புகள் தொடரச்செய்ய வேண்டும் என்கின்ற நோக்கில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கு பல்வேறு முன்னேடுப்புகள் பள்ளிக் கல்வித் துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் சரியான நேரத்தில் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க எதுவாக விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கும் நாள் முடிவடையும் நாள், கட்டணவிவரம் போன்றவற்றுடன் தொடர்புடைய தேர்வு சார்ந்த தகவல்கள் பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக அனைத்து மாவட்டங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த National ServiceScheme(NSS) மாவட்ட தொடர்பு அலுவலர்கள் (District Liaison Officer | வாயிலாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் பள்ளிகளுக்கு வருகின்ற 04.012023 ஆம் தேதி முதல் நுழைவுத் தேர்வுகளுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆசிரியர்களுடன் இணைந்து மாணவர்களுக்கு உதவுவார்கள்.

Post a Comment

0 Comments