தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்ஆய்வாளர்கள் தாலுகா பதவிகளுக்கு 933 பணிக்காலியிடங்களும், ஆயுதப்படை பதவிகளுக்கு 366 பணிக்காலியிடங்களுமென மொத்தம் 1299 காலிப்பணியிடங்களுக்கு நேரடி தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 21.12.2025 காவல் சார்ஆய்வாளர்கள் தேர்வானது தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் மாணவர்கள் இத்தேர்வுக்கு தயாராகும் வகையில் 16.12.2025 செவ்வாய்க்கிழமை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வைத்து இலவச மாதிரித்தேர்வு நடைபெறவுள்ளது.
இந்த மாதிரி தேர்வானது காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மாணவர்கள் அனைவரும் 9.30 மணிக்குள் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இம்மாதிரித் தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் அனைவரும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், தேர்விற்கு விண்ணப்பித்த விண்ணப்ப நகல், தேர்வு நுழைவுச்சீட்டு மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை தேர்வு நாளன்று கொண்டுவருமாறு, மேலும் இத்தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் Telegram Channel συπσστ EMPLOYMENT OFFICE NAGERCOIL ல் பகிரப்பட்டுள்ள Google Form ஐ பிழையின்றி முன்பதிவு செய்து கொள்ளுமாறும் முன்பதிவு செய்யும் மாணவர்கள் மட்டுமே இத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர் என்ற விவரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்த வாய்ப்பினை போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா. இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்