தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில்
(2024-2025) அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் அரசு மானியத்தில் ஊதியம் பெற்று பணிபுரிந்து வரும் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான வழி காட்டுதல்களை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டிருக் கிறது.
அதன்படி, உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப் பட வேண்டியவராக இருந்து 40 சதவீதம் பார்வைக் குறைபாடுடையவராக இருந்தால் அவருக்கு அதில் விலக்கு அளிக்க வேண்டும். அதேபோல், தேசிய மாண வர் படை அதிகாரியாக இருந்தால் அவருக்கும் விலக்கு அளிக்க வேண்டும்.
உபரி ஆசிரியர்கள் விவரங்களையும், பள்ளி நிர்வாகத் தின்மூலம் பணி நிரவல் செய்து மாறுதல் ஆணை வழங் கப்பட்ட விவரங்களையும் முதன்மைக் கல்வி அலுவலரி டம் அந்தந்த பள்ளிகள் தெரிவிக்க வேண்டும்.
பணி நிரவல் செய்யப்பட்ட விவரங்கள் எமிஸ் தளத் தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
சிறுபான்மை அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை பொறுத்தவரையில், உபரி ஆசிரியர்களை அதே வகையி லான பிற சிறுபான்மை பள்ளிகளில் பணி நிரவல் நடவ டிக்கை செய்திடவேண்டும்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களால் பதிவேற் றம் செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில், மே இறுதி வாரத்தில் வருவாய் மாவட்டத்துக்குள் பணி நிர வல் கலந்தாய்வு நடத்த வேண்டும் எனவும், அதனைத் தொடர்ந்து அரசாணை எண் 146-இல் தெரிவிக்கப்பட் டுள்ள நெறிமுறைகளின்படி தொடர் பணிநிரவல் நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என முதன் மைக் கல்வி அலுவலர்களுக்கு கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்