தடுப்பு பற்றிய விழிப்புணர்வு
பத்திரிக்கை செய்தி
தற்போது கோடைக்காலம் துவங்கியுள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் வரும் நாட்களில் சராசரி வெப்ப நிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் உயர் வெப்ப நிலையிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பின்வரும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு
வெப்பம் சார்ந்த நோய்க்கான அறிகுறிகள்
சூடான வறட்சியான சிவந்த சருமம்
உடல் வெப்பநிலை 40°C மேல் அல்லது 104 F
குமட்டல் மற்றும் வாந்தி
கடுமையான தலைவலி, சோர்வு மற்றும் கால் பிடிப்பு, மூச்சுத்திணறல் நெஞ்சு படபடப்பு தலைசுற்றல் மயக்கம் பதற்றம்.
நீங்களோ அல்லது அருகில் உள்ளவரோ அசாதாரணமாக உணர்ந்தால்
தண்ணீர் அருந்தவும்
ஓய்வெடுக்கவும், அருகில் உள்ள குளிர்ச்சியான பகுதிக்கு நகரவும்
குளிர்ந்த நீரில் குளிக்கவும்
பின்வரும் அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை அணுகலாம் அல்லது அவசர சிகிச்சை 108 ஊர்தியை அழைக்கலாம்
கால் சதைப்பிடிப்பு ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தால்
மயக்க நிலை
உடல் வெப்ப நிலை 40°C மேல் அல்லது 104 F.
மற்ற அறிகுறிகள் தீவிரமடைந்தால்
வெப்பம் தணிப்போம் செய்ய வேண்டியவை
போதுமான அளவு நீர் பருகவும்
நேரிடை சூரிய ஒளியை தவிர்க்கவும்
வெப்ப அலைகளில் இருந்து பாதுகாக்க குடைகள், தொப்பிகள் பயன்படுத்தவும்
நண்பகல் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டிற்குள்ளேயே இருக்கவும்
வெப்பம் தணிப்போம் செய்யக்கூடாதவை
நண்பகலில் கடுமையான பணிகள் செய்வதை தவிர்க்கவும்
மதிய வேளையில் நிறுத்தப்பட்ட வாகனங்களில் குழந்தைகள் மற்றும் செல்லப்பிராணிகளை விட்டுச் செல்வதை தவிர்க்கவும்
செயற்கை குளிர் பானங்கள், காபி, டீ. மது அருந்துவதைத் தவிர்க்கவும்
நண்பகல் வேளைகளில் சமைப்பதை தவிர்க்கவும்
வெயில் காலங்களில் காலணிகள் இல்லாமல் வெறும் காலில் நடப்பதை தவிர்க்கவும்
அதிக புரத சத்து உணவு மற்றும் காலாவதியான உணவுகளை தவிர்க்கவும்
நண்பகல் 12 மணி முதல் மூன்று மணி வரை வெளியே செல்வதை தவிர்க்கவும்
கடுமையான வெப்பத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு நீங்கள் எவ்வாறு உதவலாம்?
பாதிக்கப்பட்ட நபரை குளிர்ந்த நிழல் உள்ள காற்றோட்டமான இடத்தில் படுக்க வைக்கவும்
பாதிக்கப்பட்டவரின் உடைகளின் மேல் குளிர்ந்த நீரை ஊற்றவும்
வெப்பத்தால் பாதிக்கப்பட்டவர்க்கு விசிறி விடவும்
குளிர்ந்த குடிநீரை பருக வழங்கவும்
பாதிக்கப்பட்டவருக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கவும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்