சத்துணவு உதவியாளர் காலிப் பணி யிடங்களில் மாற்றுத் திறனாளிகளை நியமிப்பதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைச் செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் பிறப் பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்: சத்துணவு உத வியாளர் பணியிடங்களுக்கு மாற்றுத் திறனாளிகளை நியமனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட தற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தடையை விலக்கி சத்துணவு உதவியாளர் பணிக்கான நேரடி நியமனத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒ துக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்ற முடிவு எடுக்கப் படுகிறது.
என்னென்ன தன்மைகள்: சில தன்மைகளைக்
கொண்டு இருக்கக் கூடிய மாற்றுத் திறனாளிகள் சத்து ணவு அமைப்பாளராகவும், சமையல் உதவியாளர்களா கவும் நியமனம் செய்யப்படுவர்.
அதாவது, கண்ணாடி அணிந்து குறைந்த அளவி லான பார்வை, கேட்பதில் சிரமம் இருந்தாலும், கருவி களைப் பொருத்தி சரியாகக் கேட்கும் திறனைப் பெற்று இருக்க வேண்டும்.
குட்டையாக இருப்போர், அமிலவீச்சுக்கு தாக்கு தலுக்கு உள்ளானோர், இரண்டு கால்களும் பாதிக் கப்பட்டு மூன்று சக்கர வாகனத்தைப் பயன்படுத்து வோர், தொழுநோய் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் போன்ற தன்மைகளுடன் இருப்போரைக் கொண்டு சத் துணவு அமைப்பாளர், உதவியாளர் பணிகளில் 4 சத வீதகாலியிடங்களை நிரப்ப அரசு முடிவு செய்துள்ளது என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்