Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில் மத்திய அரசு செய்த 4 மாற்றம் என்ன?

பாஸ்போர்ட் விண்ணப்ப விதிகளில், மத்திய அரசு நான்கு முக்கிய மாற்றங்களை செய்துள்ளது. அதன் விபரம் வருமாறு:
பிறப்பு சான்றிதழ் கடந்த 2023 அக்டோபர் 1க்கு பின் பிறந்தவர்களுக்கான பிறந்த தேதிக்கு, நக ராட்சி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் அல்லது பிறப்பு மற் றும் இறப்பு பதிவு சட்டத்தின் கீழ் உள்ள அதிகாரியால் வழங் கப்பட்ட பிறப்பு சான்றிதழ் மட்டுமே சான்றாக எடுத்துக் கொள்ளப்படும்.

அதற்கு முன் பிறந் தவர்கள், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், பள்ளி மாற்றுச் சான்றி தழ், மெட்ரிகுலேஷன் சான்றிதழ் உள்ளிட்ட மற்ற ஆவணங்களை தொடர்ந்து பயன் படுத்தலாம்.

2முகவரி

இதுவரை, பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் அச்சிடப்பட்ட முகவரி, பாஸ்போர்ட் வைத்திருப் போரின் பாதுகாப்பு கருதி இனி அச்சிடப்படாது. அதற்கு பதில், குடியுரிமை அதிகாரிகள் மட்டும், ''ஸ்கேன்' செய்து அறியும் வகையில், 'பார்கோடு' வடிவில் அச்சிடப்படும்.

3 வண்ண அடையாளம்

பாஸ்போர்ட்டின் வகைகளை எளிதில் அறியும் வகையில், இனி, குடிமக்களுக்கு எப்போதும் போல நீல நிறத்தில் வழங்கப் படும். அரசு அதிகா ரிகளுக்கு வெள்ளை நிறம், துாதரக அதி காரிகளுக்கு சிவப்பு நிறத்திலான பாஸ் போர்ட்கள் அறிமுகப் படுத்தப்பட உள்ளன.

Post a Comment

0 Comments