Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

10 - ஆம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடக்கம்-என்னென்ன கட்டுப்பாடுகள்?

10 - ஆம் வகுப்பு பொது தேர்வு நாளை தொடக்கம்-என்னென்ன கட்டுப்பாடுகள்?
தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வெள்ளிக்கி ழமை தொடங்கவுள்ளது. தொடர்ந்து இந்தத் தேர்வு ஏப். 15 வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங் களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவ தும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13 ஆயி ரத்து 036 பேர் எழுதுகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87 ஆயிரத்து 148 மாணவ, மாணவிகள், 25,888 தனித்தேர் வர்கள் மற்றும் 272 சிறைக் கைதிகள் அடங்குவர்.

என்னென்ன கட்டுப்பாடுகள்? இதுதவிர மாணவர்களுக்கும்,

ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண் டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதே போல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகி யவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும்அறை கண்கா ணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

இதுதவிர பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள்க ளில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இதனை 9498383075, 9498383076 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments