தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு வெள்ளிக்கி ழமை தொடங்கவுள்ளது. தொடர்ந்து இந்தத் தேர்வு ஏப். 15 வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங் களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவ தும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13 ஆயி ரத்து 036 பேர் எழுதுகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87 ஆயிரத்து 148 மாணவ, மாணவிகள், 25,888 தனித்தேர் வர்கள் மற்றும் 272 சிறைக் கைதிகள் அடங்குவர்.
என்னென்ன கட்டுப்பாடுகள்? இதுதவிர மாணவர்களுக்கும்,
ஆசிரியர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தேர்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண் டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதே போல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தேர்வு எண், பெயர் ஆகி யவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவர் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபார்த்து மாணவர்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும்அறை கண்கா ணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.
இதுதவிர பொதுத்தேர்வு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் புகார்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு நாள்க ளில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இதனை 9498383075, 9498383076 ஆகிய எண் களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளலாம் என்று தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்