பார்வையில் காணும் கடிதங்களின் மீது தங்கள் கவனம் ஈர்க்கப்படுவதுடன், அதில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் இளநிலை உதவியாளர் / தட்டச்சர்கள் ஆகியோருக்கு 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வு பாகம்-1-ல் தேர்ச்சி பெற்றதற்கான முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரப்பட்டுள்ளது.
2. மேற்காண் தங்களின் கருத்துருவை பரிசீலித்ததில், அரசாணை (நிலை) எண்.37, பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.IV)த் துறை, நாள் 10.03.2020-ல் அரசுப் பணியாளர்கள் பெற்றிடும் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1-ற்கு வழங்கப்படும் முன் ஊதிய உயர்வு இரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அரசாணை (நிலை) எண்.116. பணியாளர் மற்றும் நிருவாக சீர்திருத்த(அ.வி.IV)த் துறை, நாள் 15.10.2020-ல் பத்தி 4(3)-ல், 10.03.2020-க்கு முன்னர் சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்
யாளர்களுக்கு முன் ஊதிய உயர்வு 31.03.2021-ற்குள் வழங்கி ஆணை யிடப்படவேண்டும் என காலக்கெடு நிர்ணயித்து ஆணை ளியிடப்பட்டது. இக்காலக்கெடுவானது, 31.03.2021 அன்றுடன் முடிவடைந்த
நிலையிலும் மற்றும் இது அரசின் கொள்கை முடிவு என்பதாலும், சார்நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு பாகம்-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பணியாளர்களுக்கு தற்போது முன் ஊதிய உயர்வு வழங்கக் கோரும் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்