மேற்காண் பார்வை 1, 2 மற்றும் 3 இல் காணும் அரசாணை மற்றும் இயக்குநரின் செயல்முறைகளின் படி மார்ச்/ஏப்ரல்-2025 ஆம் ஆண்டில் தருமபுரி மாவட்டம் அரசு உயர்/மேல்நிலை/மெட்ரிக் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவ/மாணவிகளுக்கு 01.03.2025 -இன்படி 14 வயது நிறைவு பெறாமல் இருப்பதால் பார்வை 5- இல் காணும் சார்ந்த தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு எழுத வயது தளர்வாணை கோரி விண்ணப்பம் பரிந்துரை செய்து பெறப்பட்டுள்ளது.
மேற்கண்ட விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு சார்ந்த தலைமையாசிரியர்கள் அளித்த ஆவணங்கள் அடிப்படையிலும், பரிந்துரைப்பேரிலும், மருத்துவசான்றின்படியும் இணைப்பில் கண்டுள்ள மாணவ/மாணவிகளுக்கு பார்வை-2 இல் காணும் அரசாணையின் படி மார்ச்/ஏப்ரல்-2025-ல் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத வயது தளர்வானை அளித்து ஆணை வழங்கப்படுகிறது. கல்வித்துறை உயர் அலுவலர்கள் பள்ளி வருகையின்போது (அல்லது) ஆண்டாய்வின்போது மேற்காண் வயது தளர்வு ஆணையினை முன்னிலைபடுத்தப்படவேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்