Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Today News: தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை- தனியார் பள்ளி இயக்குனர்

Today News: தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய எச்சரிக்கை- தனியார் பள்ளி இயக்குனர்
தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்ததனை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையின் போது எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளி இயக்குனர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது


Post a Comment

0 Comments