தமிழ்நாட்டில் தற்போது பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரையாண்டு தேர்வு டிசம்பர் 10ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடைபெற்று தற்போது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அரையாண்டு விடுமுறை டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக புகார் எழுந்ததனை முன்னிட்டு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது தமிழ்நாட்டில் உள்ள சில தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறையின் போது எவ்வித சிறப்பு வகுப்புகளும் நடத்தக்கூடாது என அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளி இயக்குனர் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்